Wednesday, March 18, 2015

அறிவு!                           அறம்!                                        அன்பு!                                  அமைதி!


மார்கண்டேய கட்ஜு விமர்சனம்!
மாநிலங்களவையில் கண்டனம்!!
மகாத்மா காந்தி தேசத் தந்தையா?!



'தேசத் தந்தை' மகாத்மா காந்தியை 'பிரிட்டிஷ் ஏஜென்ட்' என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஜப்பானியர் கைக்கூலி எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது 'வலைப் பூவில்' எழுதியுள்ளதாகவும், 11.03.2015 புதனன்று மாநிலங்களவையில் 'பூஜ்யம்' நேரத்தில் எதிர்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியினர் இணைந்து கட்ஜுவின் கருத்துக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து ஒருமித்தக் கருத்தோடு நிறைவேற்றியதாகவும், 12.03.2015 வியாழக்கிழமை 'தி இந்து' நாளிதழில் செய்தி வந்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது கருத்துகளை தனது வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய மாநிலங்களவையில் அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்!

கட்ஜு கருத்து சரியா தவறா? கண்டனத் தீர்மானம் சரியா தவறா? என்னும் சர்ச்சைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? கடவுளையே விமர்சிக்கும் இந்திய நாட்டில் காந்தியை விமர்சிப்பது கருத்துரிமையை மீறிய செயலாகுமா? இதற்கு முன்னர் வேறு எவரும் காந்தியை விமர்சனம் செய்ததே இல்லையா? இதை இந்திய மக்கள் அறிந்து தெளிந்திடவே பொதுநல நோக்கோடு என் கருத்துகளை இந்திய மூத்தக் குடிமகன் என்னும் உரிமையில் பதிவு செய்கிறேன்.

அமெரிக்க வாழ் இந்தியர் டாக்டர் வேலு அண்ணாமலை Ph.D. (USA) அவர்கள் தொகுத்த 'சார்ஜன்ட் மேஜர் எம்.கே. காந்தி என்னும் நூலினை 1995 டிசம்பர் 21ல், 'அம்பேத்கர் அறிவுலகம்' சார்பாக தமிழ்மறையான் அச்சிட்டு வெளியிட்டுள்ள நூலிலிருந்து சில பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரை விமர்சனம் செய்தவர்கள் ஏராளம். அதனில் ஒருசிலவற்றை இவண் எடுத்தியம்புகின்றேன்.

காந்தியின் அரசியல் குருவாகக் கருதப்பட்ட கோகலே கூறுகிறார்:- "காந்தியே, இன்றைக்கு நாட்டை நாசப்படுத்தக்கூடியதாக அச்சுறுத்துபவை உம்முடைய அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளே! அவற்றை உதிர்ப்பதிலிருந்து நீர் ஒதுங்கிக் கொண்டால் அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றி விடலாம்; நீர் எப்பொழுதுமே உமது சொந்த வழியிலேயேதான் நடப்பீர், மற்றவர் கருத்தை மதிக்கவே மாட்டீர் ".

செசில் பிரபு காந்தியைப் பற்றி இவ்வாறு கூறினார்:- "உலகம், இதுவரை கண்டிராத அமைதியின் மிகப்பெரிய எதிரி காந்தியே! காந்தியின் அமைதி வழி அகிம்சைப் போராட்டம் என்பது கலவரங்களுக்கு மட்டுமே இட்டுச் செல்லும்; வன்முறை வெறித்தனத்துக்கே அதனால் இறுதி வெற்றி கிட்டும்".

அறிஞர் எம்.என். ராய்:- "பிற்படுத்தப்பட்ட இந்தியப் பொதுமக்களின் அறியாமை, குருட்டு நம்பிக்கை, தலைவர் வழிபாடு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே காந்தியம். மடமை, கோழைத்தனம், தோல்வி மனப்பான்மை, பிற்போக்குநிலை ஆகியவற்றின் மிக மிக கீழ்த்தரமான வெளிப்பாடே காந்தியம் என்பது!"

கவிஞர் இரவீந்ரநாத் தாகூர்:- நீங்கள் உண்மையிலேயே 'மகாத்மா' என்றால் - தெய்வீக சக்தி உடையவர் என்றால் - நீங்கள் ஏன் ஓர் அற்புத நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவைக் காப்பாற்றக் கூடாது?"

பண்டித ஜவகர்லால் நேரு தம்முடைய தன் வரலாறு (Auto biography) நூலில் காந்தியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "அரசியல் சிக்கல் ஒன்றுக்கு காந்தியின் மதவாத உணர்ச்சிவயப்பட்ட அணுகுமுறையைக் கண்டு அவரிடம் நான் ஆத்திரமே அடைந்தேன். இது தொடர்பாகக் கடவுளை அவர் அடிக்கடி ஆதாரக் குறிப்புகள் காட்ட துணைக்கு அழைத்ததும் எனக்குச் சினத்தையே கொடுத்தது".

வட்ட மேசை மாநாடுகளுக்குப் பின்னர் அண்ணல் அம்பேத்கரின் கோரிக்கைகளை ஏற்று பிரிட்டிஷ் அரசு தீண்டப்படாத மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கியபோது அதை எதிர்த்து பூனா எரவாடா சிறையில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். இதைக்கண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: "தீண்டப்படாத சமூகத்தின் மீது ஆங்கிலேயர் அரசே அக்கறைக் கொண்டு 'தனித் தேர்தல் தொகுதி திட்டம்' கொண்டுவரும் போது அதனைத் தடுப்பதற்காகச் சாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வது என்ன நீதி" என்று காந்தியைக் கடுமையாகவே கண்டித்தார் போஸ்.

காந்தியின் இந்துத்தவ-வர்ணாஸ்ரம படிநிலை முறைகளை எதிர்த்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்:
"காந்தியின் 'பூனா ஒப்பந்தம்', சாகும் வரை உண்ணா விரதம் என்பவை எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு எதிரான போர் அறிவிப்பே தவிர தீண்டாமைக்கு எதிரான போர் அறிவிப்பு இல்லை!"

"நாக்கிலே கடவுள் பெயரையும், கக்கத்திலே வாளையும் கொண்ட ஒரு மனிதர் 'மகாத்மா' என்னும் சிறப்புப் பட்டத்துக்குத் தகுதியானவர்தான் என்றால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியும் மகாத்மாதான்."

"காந்தி 21 தடவைகள் எத்தனையோ காரணங்களுக்காக உண்ணா நோன்பு இருந்தார். ஆனால் ஒரு தடவை கூட தீண்டாமை ஒழிப்புக்காகவோ, தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்திற்காகவோ அவர் உண்ணா நோன்பு இருந்ததே இல்லை."

"தீண்டப்படாதவர்களின் முதல் எதிரி காந்திதான். ஆகையால் காந்தியைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்."

"காந்தி சாதி முறையை எப்போதுமே எதிர்க்கவில்லை. அவர் ஒரு சாதி மனிதராகவே வாழ்ந்தார். மடிந்தார்." காந்தி என்பதே அவருடைய சாதியின் பெயர்தான்.

"தீண்டப்படாதவர்களின் போராட்ட வீரராக உரிமை கொண்டாடுவார் காந்தி. ஆனால் உண்மையில் அவர்.... நடந்து கொண்ட முறை என்ன? இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும், சீக்கியருக்கும் அரசியல் அதிகாரத்தில் கணிசமாக பங்கினை அளிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார் அவர். அதே வேளையில் சமூக  ஒடுக்குமுறைக்கும், சமூகக் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தீண்டப்படாதவர்களைப் பாதுகாப்பதற்கு உள்ள ஒரே வழியான தனித்தொகுதிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை அவர் மறுத்தார். நீதி, நெறிமுறை, கட்டாயத்தேவை எல்லாவற்றையுமே புறக்கணித்துவிட்டு அவற்றை மறுத்தார் காந்தி."

"தீண்டப்படாதவர்களுக்கு உதவுகின்ற இந்துக்கள் அல்லாதார் எல்லாரையும் (கிருத்துவர், இசுலாமியர், சீக்கியர்) வெளிப்படையாகவே எதிர்த்து வந்திருப்பவரே காந்தி. இந்துக்கள் அல்லாதாருக்கு இந்துக்கள் உதவலாம். ஆனால் ஒருவருமே தீண்டப்படாதவருக்கு உதவவே கூடாது. இதுவே காந்தியத் தத்துவமாகும்."

பேச்சளவில் மட்டுமல்ல, செயலளவிலும் இதைச் செய்துக் காட்டியவர் காந்தி.....

'1938-ல் மத்திய மாகாணத்தில் டாக்டர் கரே அவர்களால் ஓர் அமைச்சரவை அமைக்கப்பட்டது. நன்றாகத் தகுதி வாய்ந்த தீண்டப்படாத ஒருவரை அவர் அமைச்சராகச் சேர்த்துக் கொண்டார். இந்த அமைச்சரவை காங்கிரஸ் கட்சி மேலிடத்தால் (காந்தியால்) தூக்கி எறியப்பட்டது. அதற்கு டாக்டர் கரே மீது காந்தியால் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று.... "தமது புதிய அமைச்சரவையில் ஒரு தீண்டத்தகாதவரை அவர் எப்படி இணைத்துக் கொண்டார்" என்பதுதான்.

இது குறித்து டாக்டர் கரே இப்படி குறிப்பிடுகிறார்.... "எனது இரண்டாவது அமைச்சரவையில் (தீண்டப்படாதவரான) அரிசன் ஒருவரைச் சேர்த்துக் கொண்டேன். அதற்காக காந்தி அவர்கள் என்னை கடுமையாகக் கண்டித்தார்....." எனது செயல் மூலம் சாதாரண எளிய மக்களிடையே பிரிவினைக் கனலை விசிறிவிட்டேன் என்றும், அவர்களின் பதவிப் பேராசையைத் தூண்டிவிட்டதன் மூலம் காங்கிரசின் கொள்கைக்கே கேடு விளைவித்துவிட்டேன் என்றும் மகாத்மா கூறினார்."

அடுத்த அமைச்சரவை டாக்டர் கரே அவர்களால் அமைக்கப்பட்ட போது அதிலே தீண்டப்படாதவர் எவரும் சேர்க்கப்படவில்லை. இதை காந்தி பாராட்டி ஏற்றார்!

இதிலிருந்து காந்தியின் மனப்போக்கு தெள்ளெனப் புரிகிறது அல்லவா? தீண்டப்படாதவர் பார்ப்பான் முதல் சூத்திரன் வரையிலான சதுர் வர்ணத்தார்க்கு அடிமை வேலை செய்ய வேண்டும். அரசியலிலும் போராட்டங்களிலும் பங்கேற்று தீண்டப்படாதவர்கள் ஆயிரமாயிரமாக சாக வேண்டும். ஆனால் ஒருவரும் அமைச்சராகவே கூடாது. உயர் பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது" இதுவே காந்தியின் செயல்பாடு. காந்தி சமதர்ம வாதியல்ல! சனாதனவாதி!!

கட்ஜு விமர்சனத்துக்குப் பிறகு காந்தியைப்பற்றி மிகப்பலர் புகழ்ந்து எழுதிவருகிறார்கள். தி இந்துவில் 'ஆசை' என்பவர் 14.03.2015 அன்று ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி? என்னும் தலைப்பிட்டு, காந்தி, மதத்தை அரசியலில் கலந்தவரா? புரட்சியை மழுங்கடித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். தினமணியில் பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் 'முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்' என்னும் தலைப்பில், இங்கிலாந்து நாடாளுமன்றம், தன்னுடைய வளாகத்திற்கு எதிராக இன்று (14.03.2015) மகாத்மா காந்தியடிகளுக்குச் சிலை அமைப்பதை சிலாகித்து எழுதியுள்ளார்.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல் ஒவ்வொரு மனிதருக்கும் இருவேறு குணங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. எனவேதான் உலகப் பொதுமறையாத்தத் திருவள்ளுவர் குணம் நாடி குற்றமும் நாடிடக் கூறியுள்ளார்.

காந்தியின் வாய்மொழிகள் சிலவற்றை இவண் காண்போம்:
"எனது கருத்துப்படி சாதி அமைப்பு ஓர் அறிவியல் அடிப்படை கொண்டதாகும்," "ஒரு சமுதாய நெறிமுறைக் கட்டுப்பாட்டை சாதி அமைப்பு உருவாக்குகிறது", "சாதியை ஒழிப்பது என்பது இந்து மதத்தையே தகர்ப்பது ஆகும்."  - காந்தி, 'அரிஜன் இதழ்' 3-6-1947
(காந்தி ஓர் சாதி வெறியர் என்பது புலனாகும்)

"வாழ்க்கையின் சட்டம் என்று வருணசிரம தருமத்தை நான் நம்புகிறேன். நான் குப்பை அள்ளும் ஒரு தோட்டியாக இருந்தால், என் மகனும் ஏன் அப்படி தோட்டியாக இருக்கக் கூடாது? - காந்தி, 'அரிஜன் இதழ்' 3-6-1947
(காட்டு மிராண்டியின் மகன் கடைசிவரை காட்டுமிராண்டியாகவே வாழ வேண்டும் என்கிறார்)

"சாதி இந்துக்களிடமிருந்து தீண்டப்படாதவர்களைப் பிரிப்பதை என் உயிரைக் கொடுத்து நான் எதிர்ப்பேன். மற்றச் சிக்கல்களோடு ஒப்பிடும்போது தீண்டப்படாத வகுப்பினரின் சிக்கல் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை"
                                                                                              - 1931, இலண்டன் வட்டமேசை மாநாட்டில் காந்தி உரை
(மனித உரிமை மறுக்கப்படுவது மகாத்மாவுக்கு மயிரளவு - மழைத்துளியளவாகத் தெரிகிறது)

"ஒரு சனாதன மனிதன் என்று என்னை நானே அழைத்துக் கொள்கிறேன்".  
                                                                                                                                             - காந்தி, 'தரும மாந்தன்' பகிலம் - 4.

"சாதி என்பதன் பொருள் ஒரு மனிதனின் தொழிலை முன்கூட்டியே முடிவு செய்தல் என்பதுதான். தனது உயிர் வாழ்க்கைக்காக தன்னுடைய முன்னோர்களின் தொழிலை மட்டுமே ஒரு மனிதன் மேற்கொள்ள வேண்டும் என்பதே சாதி உணர்த்தும் உட்பொருள்.       - காந்தி: 'வருண வியாவஸ்தா' - பக்கம் 15.
(வெகு மக்கள் கல்வி கற்று வாழ்வில் உயரக்கூடாது என்கிறார்.)

"சூத்திரன் என்பவன் தனது மதக் கடமையாகவே உயர் சாதிக்காரர்களுக்கு ஊழியம் செய்கிறான். அவன் எந்த காலத்திலும் சொந்தமாகச் சொத்து வைத்திருக்கக் கூடாது. அத்தகைய சூத்திரன் மீதுதான் கடவுள்கள் பூ மழை பொழிகின்றனர்.                                                        - காந்தி; வருணவியாவஸ்தா. பக்கம். 15.
(ஏற்றத்தாழ்வோடு படைத்தக் கடவுளை கல்லால் அடிக்கவேண்டும். இதை நியாயபபடுத்துபவரை சொல்லால் அடிக்க வேண்டும். இதை தான் கட்ஜு செய்தார்)

முதலாம் உலகப்போரின்போது அகிம்சாவாதி காந்தியின் அறைகூவல்:
"மிக விரைவாகக் கொல்லக்கூடிய போர்க் கருவிகளைக் கையாளும் முறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமானால் பட்டாளத்தில் நம்மை நாமே பதிவு செய்து கொள்வது நமது கடமை. போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் முறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
                                                                                                                                             - காந்தி: 23.06.1918-ல் வேண்டுகோள்

"முதலாம் உலகப் போருக்குப் படைவீரர்களைச் சேர்க்கும் இயக்கப் பணியில் நம்மை நாமே இலட்சக்கணக்கான மக்களுடன் இணைத்துக் கொள்வது - இந்தியாவுக்குச் செய்யும் மிகச் சிறந்த தொண்டு என்று நான் நம்புகிறேன்."
                                                                                                                                                                                  - காந்தி: 4.7.1918-ல்.

"பிரிட்டிஷ் பேரரசுக்குக் காணிக்கையாகப் பொருளாக தன்னுடைய உடல் வலிமை மிக்க புதல்வர்கள் எல்லாரையுமே இந்தியா ஒப்படைக்குமாறு செய்வேன்."

இந்தியாவின் விடுதலைக் காலத்தில் இந்து முஸ்லீம் கலவரத்தின் போது காந்தியின் பிரகடனம்:-
"கல்கத்தா நகரம் முழுவதுமே குருதி வெள்ளத்தில் நீச்சல் அடித்தாலும், அந்தக் கலவரம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தாது, ஏனெனில் கள்ளம் இல்லாத மக்கள் விருப்பத்தோடு புரியும் தியாகம் இது"..... "உங்களால் மற்றவர்களை (இசுலாமியர்களை) தாக்க முடியும் என்றால், பிறகு உங்களை எதிர்த்து வேறு எவராலும் ஒரு விரலைக் கூட தூக்கமுடியாது."

உயிர் பலிகள் ஏற்பட்டுவிடக் கூடாது போரினால் என்று போரினை தடுத்து நிறுத்தி புத்தன் துறவறம் பூண்டு அரண்மனையை விட்டு காடேகினார். அகிம்சாவாதி காந்தி இந்துக்களுக்கு அமைதியை போதிக்காமல், இசுலாமியர்களுக்கு இனிய உபதேசம் கூறாமல் மதவெறியைத் தூண்டிவிடுபவராகவே மகாத்மா பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் போயர் சண்டையின் போதும், ஜுலு இனத்தவர் கிளர்ச்சியின் போதும் காந்தி போரில் பிரிட்டிஷாருக்காக பணியாற்றியிருக்கிறார். இந்திய வைசிராய் செம்ஸ்போர்டு பிரபு கூட்டிய முதலாம் உலகப் போர் மாநாடு முடிவுற்றவுடனேயே, வைசிராயின் தனிச் செயலருக்குக் காந்தி இவ்வாறு எழுதினார்:-

"எனக்கு ஒரு கருத்து உண்டு. போர்ப்படைக்கு ஆள் சேர்ப்புப் பணிக்குழுத் தலைவராக நான் மட்டும் ஆகியிருந்தால், உங்களை நோக்கி மழை வெள்ளம் போலப் பெரும் எண்ணிக்கையில் ஆட்களை அனுப்பியிருப்பேன். (இது கட்ஜு கூறியதைப் போல ஏஜென்ட் செய்யும் வேலைதானே?) இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் இந்திய நாடு தன்னுடைய வலிமை வாய்ந்த உடற்கட்டு உள்ள புதல்வர்களையெல்லாம் பிரிட்டிஷ் பேரரசுக்குக் காணிக்கைப் பொருளாக ஆக்குமாறு செய்திருப்பேன்."

"..... பிரிட்டிஷ் ஆட்சிமுறை இயற்கையாகவும் பெரும் அளவிலும்
நல்லதாகும். ஆங்கிலேயர் அரசுக்கு நானாகவே தன்னிச்சையான முழு ஒத்துழைப்பைக் கொடுத்தேன். 'போயர்' அறைகூவலால் 1899-ல் பிரிட்டானியப் பேரரசின் நீடிப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்ட பொழுது அதற்குப் பணிபுரிவதற்காக என்னையே ஒப்படைத்தேன். ..... அதே போன்று 1906-ல் ஜுலு இனத்தவர் கிளர்ச்சி வெடித்தபோதும் அந்த கிளர்ச்சி முடிகிறவரை படையில் பணியாற்றினேன். லேடி ஸ்மித் நிவாரணத்திற்காக மீட்பு பணியை மேற்கொள்ள எண்ணற்ற போர் நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இரண்டு நிகழ்ச்சிகளிலும் நான் வீரப் பதக்கங்கள் பெற்றேன். தென்னாப்பிரிக்காவில் நான் ஆற்றிய படைப்பணிகளுக்காக ஆர்டிஞ்சு பிரபு அவர்களால் கெய்சர்-ஐ-இந்து என்னும் தங்கப் பதக்கம் அளிக்கப் பெற்றேன்!!

இப்படி பிரிட்டிஷ் பேரரசுக்கு உண்மை ஊழியராக இருந்த காந்தி இந்தியா வந்த பின்னர் 'வெள்ளையனே வெளியேறு', வெள்ளையர் ஆடைகளைத் தீயிட்டு எரிப்போம், கதர் ஆடைகளையே உடுப்போம் என காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது ஏன்? தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை ஆங்கிலேயரைப் போல் உடை உடுத்திய அவர் ஏழையைப்போல் இந்தியாவில் உடை மாற்றம் கொண்டதேன்? எல்லாம் வேஷம், வெளிவேஷம்!

உள்ளமெலாம் உயர்சாதி மக்களின் பாதுகாப்பு பற்றியும், உடல் தோற்றம் ஏழை எளிய விவசாயிகளின் தோற்றமாக மாற்றிக் கொண்டு, சூத்திரச் சாதி மக்களையும் தீண்டப்படாத மக்களையும் தன் வாழ்நாளெல்லாம் வஞ்சித்து வந்தார். அதுவும் அந்த அரையாடை உடை தமிழ்நாட்டிற்கு வந்தபோது தஞ்சை விவசாயிகளைக் கண்டு உள்ளம் உருகி உடை மாற்றம் செய்து கொண்டதாக ஒரு வரலாறும் உண்டு!

காந்தி எங்கே சென்றாலும் அவர் வரவேற்கப்பட்டு கோடீஸ்வரர்களுடன் அமர்த்தப்பட்டார். "காந்தியை ஓர் ஏழை என்று காட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சி இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்க வேண்டி இருந்தது." என்று அவருக்கு நெருங்கிய தொண்டரான 'கவிக்குயில்' திருமதி. சரோஜினி நாயுடு அவர்களே கூறினார். "இரயிலில் மூன்றாவது வகுப்பில் காந்தி பயணம் புரிந்த பொழுதெல்லாம், அவர் ஏறியிருந்த பெட்டி முழுவதுமே அவருக்கு என்றே ஒதுக்கப்பட்டது. காங்கிரசு கட்சித் தொண்டர்கள், கிராமப்புற மக்கள் அவருடன் பயணித்தனர்."  காந்தி ஏழை எளிய விவசாயிகளைப் பார்த்து இப்படி கூறினார்:-

"நீங்கள் விடுதலை கேட்காதீர்கள், ஏனெனில் அது உங்கள் முதலாளியை - எசமானரை ஆத்திரம் அடையச்செய்யும். அவர் உங்களை இழிவாக நடத்துவார்." இது குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்:-

"இந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள்" என்றார் காந்தி, எந்தக் காலத்திலும் எந்தக் இடத்திலும் பொருளாதாரச் சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை."

"காந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து (85%) விழுக்காடு இந்தியர்களுக்கு 'இந்தியாவின் தந்தை' ஆகமுடியாது. பதினைந்து விழுக்காடாக உள்ள 'உயர் சாதி மக்களின் தந்தை' என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்",  என்றார் டாக்டர் அம்பேத்கர்.

காந்தி கூறுகிறார் "நானோ பிறப்பினால் இந்து, சாதியில் இந்து வாழ்க்கை முறையால் இந்துக்களுக்கெல்லாம் இந்து" என்கிறார். இப்படியிருக்க காந்தியை எப்படி இந்தியாவின் தேசத்தந்தை என்பது? இந்துக்களின் தந்தை என்று வேண்டுமானால் கூறலாம். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?!

அரசியலில் மட்டும்தான் காந்தி குழப்பவாதியாக இருந்தார் என்பதில்லை. குடும்ப வாழ்க்கையிலும் அவர் அவ்வாறே இருந்துள்ளார். தம்முடைய மனைவி கஸ்தூரிபா ஓர் அடிமையாகத் தமக்கு பணிந்து நடப்பதையே அவர் விரும்பினார். காந்தி கூறுகிறார்:-

"ஓர் இந்திய ஆண்மகன் தன் மனைவியிடம் உரிமையுடன் கேட்பது முழு மனதுடன் கூடிய அவளது கீழ்ப்படிதலையே! அவனால் மனைவியின் எதிர்வாதங்களைத் தாங்கிக் கொள்ளவே முடியாது"!

"மனைவி என்பவள் கணவனின் காம இச்சையைத் தணிக்க வந்த போகப் பொருள்; கணவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதே அவளது பிறவிப் பயன்"..... என்றே எண்ணினார்.

காந்தி தன்னுடைய மனைவிக்கு இப்படி எழுதினார்:-
"எனது போராட்டம் சாதாரண அரசியலுக்கு உரியது மட்டும் இல்லை. அது மதத் தொடர்பானது."

கஸ்தூரிபா தன் கணவர் காந்தியை நோக்கி இப்படி கூறுகிறார்:-
"நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர். மற்றவர் சொல்லை மதிக்கவே மாட்டீர்கள்....."

காந்தியின் மகன் அரிலால் எழுதிய கடிதம் ஒன்றில்....
"என் தந்தையார் தம்முடைய பிள்ளைகளிடம் ஒரு கொடுங்கோலராகவே இருந்தார். 'மகாத்மா' என்னும் சொல்லுக்கு முற்றிலும் மாறுபட்டவராகவே மகன்களிடம் அவர் நடந்து கொண்டார்."

காந்தியின் மகன் அரிலால் இசுலாமியப் பெண்ணான 'குலாப்' மீது காதல் கொண்டார். இந்தியாவில் உள்ள ஒரு வழக்கறிஞரின் அழகிய மகளே குலாப். குலாபுக்கும் தமக்கும் திருமணம் நடைபெறப் போவதைப் பற்றி அரிலாலே தம் தந்தைக்கு மடல் எழுதி வாழ்த்துக் கூறுமாறு கேட்டார். காந்தி அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்தார். காந்தியோ தனது வாழ்த்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் அரிலால் குலாப் திருமணம் நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகும் காந்தி ஒத்துப் போகவில்லை. குலாப் ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தபோது பெருந்துயரத்தில் ஆழ்ந்தார் காந்தி.

காந்தியின் இன்னொரு மகன் தேவதாஸ் காந்தி 'இராஜாஜி' என்று புகழ்பெற்ற சி. இராஜகோபால ஆச்சாரியார் அவர்களுடைய மகள் இலட்சுமியைக் காதலித்தார். காந்தியோ அவர்களுடைய கலப்பு மணத்தை எதிர்த்தார். (காந்தி வைசியர் - பனியா - வருணப் படி நிலையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர், ராஜாஜி பிராமணர், முதல் நிலையில் இருப்பவர்). எதிர்ப்பையும் மீறி இராஜாஜியின் மகள் இலட்சுமியை தேவதாஸ் காந்தி திருமணம் புரிந்துகொண்டார்.

காந்தியின் மனைவி கஸ்தூரிபா கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த சமயம், காந்தியின் மகனான தேவதாஸ் தம்முடைய தாய்க்குப் பென்சிலின் ஊசி மருந்தைச் செலுத்த வேண்டும் என்றார். அதற்காக அந்த மருந்து கல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் காந்தி "கடவுள் விரும்பினால், அவர் என் மனைவியை இந்த நோயிலிருந்து காப்பாற்றுவார்" - எனக் கூறி என் மனைவிக்கு எந்த ஆங்கில மருந்துகளையும் தரக்கூடாது, ஊசிகளையும் போடக்கூடாது என்று மறுத்துவிட்டார். கஸ்தூரிபா காலமானார்.

கஸ்தூரிபா இறந்து ஆறு வாரங்களே ஆகியிருந்துபோது காந்தி கடுமையான மலேரியா காய்ச்சலால் துவண்டுவிட்டார். வெளிநாட்டில் உற்பத்தியான 'குயினைன்' என்பதுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக உயர்ந்த சிகிச்சை மருந்தாகும். காந்தியோ இரண்டு நாட்களில் 32 கிரெய்ன் குயினைன் மாத்திரைகளை விழுங்கி உயிர் பிழைத்தார். தனக்கொரு நீதி, தன் மனைவிக்கொரு நீதி என வாழ்ந்தவரே காந்தி!

இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் அரிலால் குலாப் திருமணத்தில் மறுத்தவர், இந்தியாவில் கலப்பு திருமணத்தையும் தேவதாஸ் - இலட்சுமி திருமணத்தையும் எதிர்த்த தந்தை காந்தி எப்படி இந்தியாவின் தேசத்தந்தை ஆகமுடியும்?!

இந்தியாவில் காந்தி காலமெல்லாம் செய்தது கதர் நூல் நூற்க கைராட்டையைச் சுழற்றியது தான். கதரைப்பற்றி காந்தியின் கருத்து:-

"குடியானவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை தங்கள் சொந்த வீடுகளில் நெய்து மட்டுமே அணிய வேண்டும். பொறுக்கவே முடியாத கொடுமைகளைப் பணக்காரர்கள் - நில முதலாளிகள் - எத்தகைய வன்முறை வெறித்தனத்தோடு இழைத்தாலும் இவற்றைத் தாங்கிக் கொண்டு கதரை நெய்தபடி இருந்தால் எல்லாமே நல்லமுறையில் அமைந்துவிடும். இந்தியாவின் எல்லா வகையான பொருளாதாரக் கொடுமைகளும் மறைந்து ஒழியும். தனியாட்சியாகிய சுயராஜ்ய விடுதலை தானாகவே வெற்றிக் கனியாக இந்தியரின் மடியில் விழும்."

காந்தியின் முற்போக்குப் பொருளாதார சிந்தனையை மன்மோகன் சிங் - ப. சிதம்பரம் - அருண்ஜேட்லி ஆகியோரால் கூட எட்டவே முடியாது. இந்தக் கைராட்டையை - சர்க்காவை இந்திய தேசியக் கொடியின் மையத்தில் பதித்திட காந்தி முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய தேசியக் கொடி அமைப்புக் குழுவிலிருந்த - இந்திய அரசமைப்பு சட்டக் குழுவின் தலைவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசியக் கொடியின் மையத்தில் அசோகா சக்கரத்தை பதியச் செய்துவிட்டார். எனவே காந்தி தேசியக் கொடியையே ஏற்க மறுத்துவிட்டார்.

1947 ஆகஸ்டு பதினைந்தாம் நாள் இந்தியா தன் விடுதலை விழாவைக் கொண்டாடியது. மகாத்மாவோ, டில்லியில் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. கல்கத்தா மாநகரில் மவுனவிரதம் என்னும் பேசா நோன்பு மேற்கொண்டு துக்க நாள் கொண்டாடினார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராக பண்டித ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார். துணைப்பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இடம் பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல், காந்தியின் போக்கை கண்டு இவ்வாறு கூறினார்:-

"கிழட்டு மனிதர் வயது முதிர்ச்சியால் தளர்ச்சி அடைந்துவிட்டார்."

"எத்தனையோ மகாத்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள், எத்தனையோ மகாத்மாக்கள் மறைந்திருக்கிறார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் அப்படியேதான் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்." இந்தியாவின் இருண்ட காலம்தான் காந்தியின் காலம். மக்கள் பத்தாம் பசலித்தனமான பழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிற காலம் இது; தங்களைப் பற்றித் தாங்களே சிந்திப்பதையும், கற்பதையும், தங்கள் வாழ்வைப் பற்றிய உண்மைகளை ஆய்வு செய்வதையும் மக்கள் நிறுத்திவிட்ட காலம்தான் காந்தியின் காலம். இந்தியாவின் இருண்டகாலம்.           - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
(இந்திய அரசமைப்புச் சட்டச்சிற்பி - இந்திய மக்களை முறைசெய்து 'காப்பாற்றிய சட்டப்பிதா!  - தேசப்பிதா!!)

பிர்லா மாளிகையில் 30-01-1948-மாலை காந்தி, 'ரகுபதிராகவ ராஜாராம்' என ராமநாம பஜனையில் ஈடுபட்டிருந்த போது நாதுராம் விநாயக் கோட்சே என்னும் பார்ப்பனனால் கைத்துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால், பூனா ஒப்பந்தத்தினால் உயிர் மீட்பு பெற்ற காந்தி, "வெள்ளையனே வெளியேறு" என போராட்டங்கள் நடத்தியபோதும் வெள்ளையரால் கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்ட காந்தி, பார்ப்பனிய இந்து மதத்தை, பார்ப்பனர்களைவிட மிக அதிகமாகவே இந்துத்துவாவை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்த காந்தியை, பார்ப்பனன் விநாயக் நாதுராம் கோட்சே மூன்று குண்டுகளால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின் உயிரைப் பறித்துவிட்டான்.

'ஹே ராம்' என உச்சரித்தபடி உயிர்விட்ட காந்தியை, ராமனோ வேறு எந்த கடவுள்களோ காப்பாற்ற வரவில்லை. ராமனே காந்தியைக் கொன்றான். நாதுராம் கோட்சே என்னும் பெயரிலேயே ராமர் இருக்கிறார்.

அந்த காந்திக்கு இலண்டனில் இன்று (14.3.2015) பிரிட்டிஷ் நாடாளுமன்றச் சதுக்கத்தில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்கு அருகே, 9 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை 9 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியரின் சிலையொன்று முதன்முதலாக இலண்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் நிறுவப்பட்டிருப்பது இந்தியர் அனைவருக்குமே பெருமை. அதில் நானும் மனம் மகிழ்கிறேன். ஆனால்.....

நெல்சன் மண்டேலாவைப்போல் காந்தி ஏழை எளிய விவசாயிகள் மற்றும் தீண்டப்படாதவர்களுக்காகப் போராடியவரா? இந்திய மக்கள் அனைவரையும் சமநிலைப்படுத்தப் பாடுபட்டவரா? பிரிட்டிஷ் பிரதமர் ஜே. இராம்சே மெக்டொனால்டு 1932 செப்டம்பர் 8 ஆம் நாள் காந்திக்கு எழுதிய கடிதத்தில்......

"எத்தனையோ நூற்றாண்டுகளாக திட்டமிடப்பட்ட இழிநிலைக்கு தீண்டப்படாதவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உயர்சாதி இந்துக்களால் விற்பனைப் பொருள்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். ...... சட்டமன்ற - நாடாளுமன்றப் பேரவைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு என்று ஒரு குறைந்த அளவு எண்ணிக்கையையாவது பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தனித் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

நான் புரிந்து கொண்ட அளவில், சாகும்வரையில் உண்ணாநோன்பு என்கிற மிக உச்ச நிலையான ஒரு வழிமுறையை மேற்கொண்டுள்ள நீங்கள் திட்டமிட்டுள்ளதற்கான நோக்கம் மற்ற இந்துக்களோடு ஒடுக்கப்பட்ட மக்களும் கூட்டாகத் தேர்தல் தொகுதிகளைப் பெறுவதற்காகவா என்றால் அப்படியும் இல்லை. ஏனெனில் அந்தக் கூட்டுமுறை முன்பே அளிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதுதான் உங்கள் உண்ணாநோன்பின் நோக்கமா என்றால் அப்படியும் இல்லை.

ஆனால் தங்களது எதிர்கால வாழ்வில் அதிகார ஆதிக்கத் தாக்கத்தை உருவாக்கப்போகும் சட்டமன்ற - நாடாளுமன்றப் பேரவைகளில் தங்கள் சார்பில் குரல் கொடுக்கக்கூடிய, தங்களால் மட்டுமே தேர்வு பெற்ற பிரதிநிதிகளின் குறைந்த அளவு எண்ணிக்கையைக் கூட, இன்றைக்குக் கொடூரமான சோதனைகளில் துன்புறுகின்றவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பெறுவதைத் தடுப்பதற்காக மட்டுமே நீங்கள் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்க திட்டமிடுகிறீர்கள். ......." நீங்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கை உங்களை நியாயமானவராகவே உண்மையில் நிலை நிறுத்துமா என்கிற கேள்வியை உங்களுக்கு நீங்களே அழுத்தமாகவே கேட்டுப்பாருங்கள்."

"இந்தத் தனித்தொகுதி ஒதுக்கீடு சரியெனப்படுவதால் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டு ஏதும் மாற்றம் செய்ய விரும்பவில்லை. நீங்கள் டாக்டர் அம்பேத்கருடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்" எனக் கூறினார். பூனா எரவாடா சிறையில் உண்ணாநோன்பிருந்த காந்தியை டாக்டர் அம்பேத்கர் பலமுறை சந்தித்துப்பேசி, காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒடுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களுக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதி முறையை விட்டுக் கொடுத்து தனித்தொகுதி முறையென்னும் 'பூனா ஒப்பந்தத்தில்' கையொப்பமிட்டு பிரச்சினைக்கு முடிவு கண்டார். பிரிட்டிஷ் அரசும் அதையேற்றது:

காந்தியின் உண்ணவிரதத்தால் காந்தியின் உயிருக்கு ஊறு (ஆபத்து) நேர்ந்தால் ஆதிக்க சாதியினர் இந்தியாவெங்கும் உள்ள தம் இன தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களைக் கொன்று குவித்து எரித்து விடுவார்கள் என்பதையுணர்ந்தே உயிரினும் மேலான உரிமையை விட்டுக் கொடுத்து காந்தியின் உயிரையும், கோடிக்கணக்கான தீண்டப்படாத மக்களின் உயிரையும் காப்பாற்றினார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

ஏசுவைப்போல், ஆப்ரகாம் லிங்கனைப்போல், நெல்சன்மண்டேலாவைப் போல் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்நாளெல்லாம் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி இந்தியாவை முறை செய்து காப்பாற்றிய இறைவன் டாக்டர் அம்பேத்கருக்கு பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தில் நெல்சன்மண்டேலாவுக்குப் பக்கத்தில் சிலை நிறுவி சிறப்பு செய்திருக்கவேண்டும்.

மாறாக.... உயர்சாதி இந்துக்களுக்கும், பணக்காரர் மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே பாதுகாவலராக இருந்த காந்திக்கு சிலை அமைத்திருப்பது, அவர் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் போது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு உண்மையான ஊழியராக இருந்தமையாலேயே சிலை அமைத்து காந்தியை சிறப்புப்படுத்தியிருக்கிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

- தமிழ்மறையான்
கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்
6, 3வது அவென்யூ, அசோகர் நகர், சென்னை-83.Email: thamizhmaraiyaan@gmail.com

Sunday, December 14, 2014

ஆளுநர் Dr. . பத்மநாபன் IAS
அகவை 87 வாழ்த்துப்பா!
14.12.2014

அண்ணல் அம்பேத்கரை நேரில் சந்தித்து நல்லாசிகள் பெற்றவர்
அம்பேத்கர் அகடமியின் நிறுவனர் ஆளுநர் Dr. .பத்மநாபன் IAS.,
அண்ணாநகரில் அரங்கம் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர்
அகவை 87, 14.12.2014-ல், வணங்கி வாழ்த்துகிறோம் Dr. . பத்மநாபன் வாழ்க!

ஆசிரியர் ஆனந்தம் அன்னை ஆதிலட்சுமி பெற்றத் திருமகன்
ஆற்காடு அருகிலுள்ள பிஞ்சியில் 14.12.1928-ல் பிறந்தவர்
ஆளுநராகி மிசோ மொழியில் திருக்குறளை பதிப்பித்தவர்
ஆதி பழங்குடி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நீடூழி வாழ்க!

இல்வாழ்க்கைத் துணையாக சீத்தாவை மணம் முடித்தவர்
இனிய மக்கள் இரவிசங்கர் சாந்தி ஆனந்தகுமாரை பெற்றவர்,
இல்லறத்தை நல்லறமாக்கி தம்மக்களை உயர்வாழ்வு வாழவைத்தவர்
இராணிப்பேட்டை பிஞ்சிக்கே பெருமை சேர்த்த பெருமகனார் வாழ்க!

ஈடிலா கல்விகற்று ஐ..எஸ். அதிகாரியாக உயர்ந்தவர்,
ஈட்டியோடு நாடோடிகளாக உலவிய நரிக்குறவர்களுக்கு நல்வாழ்வளித்தவர்
ஈன்ற பொழுதின் பெற்றோர் பெரிதுவக்க வாழ்ந்த பெருமகனார்
ஈரடி குறளாய் அன்னை சீத்தாவோடு வளமோடும் நலமோடும் நீடூழி வாழ்க!

உழுதுண்டு வாழும் உழவர்க்கே நிலங்களை உரிமையாக்கினார்
உழைக்கும் தொழிலாளர்க்கு ஊதியங்களை உயர்த்தி வழங்கினார்
உலகம் சுற்றும் உல்லாசிகளுக்கு சுற்றுலா தலங்களை உருவாக்கினார்
உத்தமர் காமராஜ் திட்டங்களுக்கு உறுதுணையாய் நின்ற ஆட்சியர் வாழ்க!

ஊர் சுற்றும் பறவைகட்கு வேடந்தாங்கலை சரணாலயமாக்கினார்,
ஊர்வேறு சேரிவேறு என்பதை மாற்றி சமத்துவபுரமாக்கினார்,
ஊட்டியை சீராக்கி ஊர்மக்கள் போற்றிட வேலை வாய்ப்புகள் தந்தார்,
ஊழையும் உப்பக்கம் கண்டுயர்ந்த உத்தமர் பத்மநாபன் வாழ்க!

எம்.ஜி.ஆர். ஆட்சியில் முதன்மை செயலராகி தமிழ்நாட்டை ஒளிரச் செய்தார்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றே கர்ணம் பதவியை VAO ஆக்கினார்.
எங்கோ ஓடிஒளிந்த ஜெயேந்திரரை கண்டுபிடித்து காஞ்சி மடத்தில் சேர்த்தார்
எங்களினப் பெருமையை எட்டுதிக்கும் பரப்பிய அப்பா ஆ. பத்மநாபன் வாழ்க!

ஏழைஎளியோர்கள் வாழ்வில் உயர்ந்திட பஸ் முதலாளிகளாக ஆக்கினார்
ஏனென்று கேட்க நாதியற்றோருக்கு கக்கன்ஜி துணையோடு குடிசைகள் அமைத்துத் தந்தார்!
ஏழையர் குடிசைகளில் மின்னொளி பரவிட மின்இணைப்புகள் வழங்கச் செய்தார்
ஏற்காட்டை 'டவுன்சிப்'பாக மாற்றி ஏற்றம் தந்த ஏந்தல் பத்மநாபன் IAS வாழ்க!

ஐஏஎஸ் தேர்வில் ஒதுக்கீடின்றி தன்னறிவாற்றலால் முத்திரை பதித்தவர்
ஐயர்முதல் அனைத்து சாதியினரும் மதித்திடும் தகுதி மிக்கவர்!
ஐம்பெருங் காப்பியங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவர்!
ஐம்புலனடக்கி வாழும் ஆற்றல் பெற்ற டாக்டர் ஆ.பத்மநாபன் IAS வாழ்க!

ஒகனேகல் நீர்வீழ்ச்சியாக காட்டாற்று வெள்ளத்தை கட்டுப்படுத்தியவர்!
ஒன்றுசேர் கற்பி போராடு என்ற தத்துவத்தை மனதில் பதித்தவர்!
ஒருதாய் மக்கள் நாமென்று கூறி ஒருமைப்பாட்டை வலியுறுத்துபவர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுயர ஆங்கில கவிதைகள் படைக்கும் Dr. . பத்மநாபன் வாழ்க!

ஓலை குடிசைகளை அன்னை சத்தியவாணிமுத்து துணையோடு கான்கிரீட் வீடுகளாக்கினார்
ஓசையின்றி மக்கள் பணியாற்றிட மக்கள் கல்விக் கழகம் நிறுவினார்!
ஓடம்போல், ஏணிபோல் பலரை அக்கரை சேர்த்தார், உயர வைத்தார்!?
ஓய்வு காலத்தில் ஓயாமல் உழைத்திடும் உழைப்புச் செம்மல் பத்மநாபன் வாழ்க!

ஔவியம் அற்றவர் பன்மொழி அறிஞர் Dr. .பத்மநாபன் IAS.
ஔதாரியம் மிக்கவர் எங்கள் உலக கவிஞர் பேரவையின் ஒப்பிலா தலைவர்,
ஔடதம் போன்றவர் தலித்இன மக்களின் நல்வாழ்வுக்கு!
ஒளவைபோல் உலகு உள்ளளவும் Dr. . பத்மநாபன் புகழோடு வாழ்க! வாழ்க!

ஜெய்பீம்! ஜெய்புத்தம்!!


அன்புடன்:
.ஜோதி, பா.தனசேகர், து.மங்களகெளரி,
Er. செ.கஜேந்திரன், M.E. 'மெரின்' S.சுந்தர்ராஜ்


இணையதளத்தில் காணவும்                                    blogspot:   http:\\jaibeem.blogspot.com                         தமிழ்மறையான்
Facebook: Thamizhmaraiyaan Gpr              கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்
Email:         thamizhmaraiyaan@gmail.com                            அசோகர்நகர், சென்னை-83.
                                                        24745637 / 24890347
------------------------------------------------------------------------------------------
இரா. புகழரசி அறிவழகன், பக்தி கணினி - 24890347 Email: bakthi15552@yahoo.com


Tuesday, December 9, 2014

டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?

டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?
06.12.1956 அன்று டில்லி அலிப்பூர் சாலையிலுள்ள இல்லத்தில் மறைவுற்று, 07.12.1956 அன்று பம்பாய் தாதரில் உள்ள இராஜகிருகா இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, தாதர் மயான பூமியில் புத்த பிக்குகள் பவுத்த முறைபடி திரிசரணங் கூறிட இலட்சோபலட்சம் மக்கள் கதறியழுதிட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உடல் எரியூட்டப்பட்டபோது எழும்பிய தீச்சுவாலையினோடு மக்கள் மனதில் காட்டுத் தீயெனக் கிளம்பிய கேள்வியிது... "டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?
தந்தை பெரியார் விடுதலையில் எழுதினார். "இந்த உலகில் மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றினார்கள்; அவர்கள் புத்தர், ஏசு, முகம்மது நபி, டாக்டர் அம்பேத்கர். பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்" என்று உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார். உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் பெரியார் ஈ.வெ. ராமசாமி.

அம்பேத்கர் இறந்த பதினோராம் நாள் அம்பேத்கரின் தொண்டர்கள் தில்லியில் கூட்டிய மாபெரும் கூட்டத்தின் வாயிலாக அம்பேத்கர் எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பது குறித்து அரசு முழுமையாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் ஒரு தூதுக் குழுவாகச் சென்று பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பந்த், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் ஆகியோரைச் சந்தித்து, அம்பேத்கரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரினர். அம்பேத்கரின் மகன் தில்லியில் காவல்துறையிடம் தன் தந்தையின் இறப்பு குறித்து ஒரு புகார் கொடுத்தார். ஆகவே மத்திய அரசு, அம்பேத்கர் இறந்த சூழ்நிலை குறித்து விசாரணை செய்ய ஓர் ஆணை பிறப்பித்தது. 1957 நவம்பர் 27ஆம் நாள் உள்துறை அமைச்சர் பந்த், "தில்லியின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நடத்திய விசாரணையின்படி, டாக்டர் அம்பேத்கரின் மரணம் இயற்கையானதாகும்" என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம் - பக்கம் 784
காவல்துறையும் விசாரணைக் கமிஷனும் ஆட்சியாளரின், அரசியலாரின் கைகளில் கட்டுண்டிருந்தது; இன்றும் அப்படியே இருக்கின்றது. அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் இந்துத்துவாவாதிகளின் இரும்புப் பிடிகளில் அடிமைகளாக இருந்தனர், இருக்கின்றனர். இதனால் விசாரணைக் கமிஷன் முடிவுகளும், அறிக்கைகளும் முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியாகத்தான் இருந்தன, இருக்கின்றன.

புத்தர் பற்றியும் பெளத்தம் குறித்தும் அம்பேத்கர் எழுதிய நூல் இறுதியில் தனிச் சுற்றுக்கெனப் புத்தரும் அவருடைய தம்மமும் (The Buddha and His Gospel) என்ற தலைப்பின் கீழ் அச்சிடப்பட்டது. இந்நூலைப் பற்றிய கருத்தை அறிவதற்காக இந்நூலின் படிகள் சுமார் அய்ம்பது பேர்களுக்கு அனுப்பப்பட்டன. 1956 பிப்ரவரியில் கடவுள் என்பது இல்லை, ‘ஆத்மா என்பது இல்லை என்ற இரு அத்தியாயங்கள் இந்நூலில் இணைக்கப்பட்டன.

- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு-பெளத்த மறுமலர்ச்சி-பக்கம் 734
கடவுளையும் ஆத்மாவையும் கற்பனையில் உருவாக்கி, கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் எழுதி, கோயில்களையும் வர்ணாஸ்ரம சதுர்வர்ணக் கோட்பாடுகளையும் ஏற்படுத்தி இந்திய மக்களின் மூளைகளைச் சாக்கடையாக்கி பூசை புணஸ்காரங்கள், வேள்விகள், யாகங்கள், பலிகள் என இந்திய பொருளாதாரத்தை முடக்கி விரயமாக்கிக் கொண்டிருக்கும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் புரோகிதப் பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதிகளும் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூலால் இடியோசைக் கேட்ட நாகமாயினர். சதி சூழ்ச்சியென வலைகள் பின்னும் வேதியர்கள், வேதவிற்பன்னர்கள், மனுநீதிக்கு மாற்றான இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதிய சட்டப்பிதா டாக்டர் அம்பேத்கரை அழிப்பதற்குச் சதிதிட்டம் தீட்டினார்கள்.
......பெளத்த சமயம் நல்லொழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பெளத்தம் நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டது. புத்தர் தன்னைக் கடவுளாகக் கருதாமல் ஒரு வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். ஆனால் கிருஷ்ணனோ கடவுள்களுக்கெல்லாம் கடவுள் நானே என்றார். ஏசு கிறிஸ்து தன்னைக் கடவுளின் மகன் என்று கூறிக்கொண்டார். கடவுளின் கடைசித் தூதன் என்று முகம்மது பைகாம்பர் (நபி) சொல்லிக்கொண்டார். புத்தர் தவிர மற்ற மதங்களின் நிறுவனர்களெல்லோரும் தங்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் தூதுவர்களாகவே கருதினார்கள். புத்தர் மட்டும் தன்னை நன்நெறியைக் காட்டுபவர் என்று கூறிக்கொள்வதுடன் மனநிறைவடைந்தார். நல்லொழுக்க நெறியே புத்தரின் சமயமாகும். பெளத்தத்தில் கடவுள் என்கிற இடத்திற்குப் பதிலாக நல்லொழுக்க நெறியே இடம் பெற்றுள்ளது. தருமம் என்ற சொல்லுக்குப் புத்தர்தான் மிகவும் புரட்சிகரமான பொருளைக் கண்டார். பார்ப்பனர்களுக்குத் தருமம் என்பது வேள்விகள் செய்வதும் கடவுளுக்குப் பலியிடுவதுமே ஆகும். தருமம் என்பதற்குப் பதிலாக நல்லொழுக்க நெறியையே தருமத்தின் சாரமாகப் புத்தர் இடம் பெறச் செய்தார். இந்து சமயத்தின் சமூகக் கோட்பாடு சமத்துவமின்மையைப் போற்றுகிறது. ஆனால் பெளத்தமோ சமத்துவத்தைப் பேணுகிறது. பகவத் கீதை நால் வருணத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என அம்பேத்கர் அக்கூட்டத்தில் விளக்கினார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பெளத்தத்தை நேரக்கி: பக்கம் 625-626
இந்தக் கருத்துகள் இந்துத்துவாவாதிகளின் இதயத்தில் சம்மட்டி அடியாக - இடியாக விழுந்தது. சாம-பேத-தான-தண்டத்தில் கைதேர்ந்த சாணக்கியக் கூட்டத்தாரின் மனதில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போலாயிற்று.
1951 மே மாதம் புது தில்லியில் நடைபெற்ற புத்தர் பிறந்தநாள் விழாவின்போது அம்பேத்கர் இந்து மதத்தின் மீது மீண்டும் ஒரு வெடிகுண்டை வீசினார். இந்துக்களிடம் காணப்படும் வன்முறை, ஒழுக்கக்கேடு மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் உள்ள இலஞ்ச ஊழல் போன்ற இழிவுகளுக்குக் காரணம் இந்து மதத்தின் சீரழிவுகளே என்று அம்பேத்கர் அவருடைய உரையில் கூறினார். மக்கள் பெளத்த மதத்தைத் தழுவினால்தான் இந்தியாவிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்றார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - அமைச்சர் பதவியைத் துறந்தார்: பக்கம் 641
                                      சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
                                     
சொல்லிய வண்ணம் செயல் (குறள்: 664)
வாய்ச்சொல் வீரர்கள் நம் நாட்டில் கோடானு கோடி; வானை வில்லாக வளைப்பேன், மணலைக் கயிறாகத் திரிப்பேன், வறுமையை ஒழிப்பேன் என்றெல்லாம் மேடைக்கு மேடை பேசி தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் பல கோடி. அண்ணல் அம்பேத்கர் அத்தகையவர் அல்லர். என்னைவிட என் நாடு பெரிது. என் நாட்டை விட என் சமுதாயமே பெரிது எனக் கூறி வாழ்ந்தவர். தன் சமுதாய மக்களுக்கு வாழ்வளித்தவர்.
                   எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
                 திண்ணிய ராகப் பெறின்
          (குறள்: 666)
என்னும் தமிழ்மறைக்கேற்ப உலக மாமேதை டாக்டர் அம்பேத்கர், தம்மின மக்களின் இழிநிலையை இலண்டன் வட்ட மேசை மாநாடுகளில் பேசியும், எழுதியும் உரிமைகளைப் பெற்றுத் தந்தவர். பார்ப்பனர்களைவிட ஆச்சாரம் மிக்கவரான வைசியர்-பனியா-காந்தியார் வர்ணாஸ்ரம நால்வருண படிமுறைகள் கடவுளால் படைக்கப்பட்டது, அதை மாற்ற முயலக்கூடாது. மனுநீதிப்படி அவரவர் தொழிலை அவரவர் செய்வதே மோட்சத்திற்கு போகும் வழி எனக் கூறி தீண்டப்படாத மக்களுக்கு வெள்ளையன் வழங்கிய ஒதுக்கீடு முறையை எதிர்த்து பூனா எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது காந்தியின் உயிரைக் காப்பாற்ற பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இரட்டை வாக்குரிமையை விட்டுக்கொடுத்த மனித தெய்வம் அம்பேத்கர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி இந்திய மக்களுக்கு வாழ்வுரிமையை வழங்கியவர். மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே இருந்த உரிமைகளை தோட்டத் தொழிலாளர் கூலிகளுக்கும், துப்புரவாளர்களுக்கும் தந்தவர். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமமே, பெண்களும் சமஉரிமை பெற்றவர்களே என இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தவர். நாயினும் பன்றியினும் கீழாக நடத்தப்பட்ட தீண்டத்தகாதவர் எனப்பட்ட பழங்குடியினரை - மண்ணின் பூர்வீகக் குடிகளை செட்யூல்ட் இனம் எனப் பட்டியலிட்டு கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் உயர்த்திட ஒதுக்கீடு உரிமைகளை சட்டத்தில் விதிகளாக்கி உயர வைத்தவர். அவர்களை இழித்துப் பழித்துப் பேசினாலோ நடத்தினாலோ சிறை தண்டனைக்குள்ளாவர் என விதிவகுத்து தலைநிமிர்ந்து வாழவைத்தவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்திய அண்ணன் அம்பேத்கர் தான் சொல்லியவண்ணம் பெளத்தம் தழுவினார். அக்டோபர் திங்கள் பதினான்கு, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறில், தன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்த சவீதா கபீர் என்னும் பார்ப்பன மனைவியோடும், ஆறேழு லட்சம் மக்களோடும்! 22 உறுதிமொழிகளைப் படித்து அதைப் பின்பற்றுவோரே நவயாண பெளத்தர்கள் என உறுதிமொழிப் பெற்றார். ஒரே நாளில் ஆறேழு லட்சம் மக்கள் அம்பேத்கரைத் தொடர்ந்து பவுத்தம் தழுவியது உலக வரலாற்றில் வேறெங்கும் என்றும் நடத்திராத மாபெரும் மதப் புரட்சியாகும். பவுத்த மறுமலர்ச்சியாகும். 
இதைத் தொடர்ந்து பர்மா, ரங்கூன் சென்று பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து மத மாற்றத்துக்கு வழிகோலப் போவதாக அறிவித்தார். ஆட்சியாளர்களும், இந்துத்துவா வாதிகளும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இந்திய நாடே பவுத்த நாடாகி விடுமோ என அய்யுற்றனர். தமிழ்நாட்டில் பண்டிதமணி அயோத்திதாசர் போன்றவர்களால் பெளத்த நெறியும், பெரியார் போன்றவர்களால் பகுத்தறிவுக் கொள்கையும் விரவிப் பரவியிருந்தது. அவரைத் தமிழ்நாட்டுக்கு வரவிடாமலே இறப்புலகுக்கு அனுப்பிவிட்டார்கள்?!
இவ்விஷயத்தில் வேலியே பயிரை மேய்ந்துள்ளது, தோட்டக்காரியே துணையாய் இருந்துள்ளார்.
அவருடைய முதன்மையான தளபதியாக இருந்த பாவ்ராவ் கெய்க்வாடுக்குத் தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பது பற்றித் தெரிவித்தார். முதல் மனைவி இறந்த பின் மறுமணம் செய்து கொள்வதில்லை என்று அம்பேத்கர் உறுதிபூண்டிருந்தார். ஆனால் இப்போது மறுமணம் செய்துகொள்வதென முடிவு செய்தார். சமைக்கத் தெரிந்த - மருத்துவம் படித்த ஒரு பெண்ணைத் தேடினார். தீண்டப்படாத சாதிகளில் இத்தகைய பெண் கிடைக்க வாய்ப்பேயில்லை. அதனால் சரஸ்வத் பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு-அரசியல் அமைப்பின் தந்தை: பக்கம்: 599
தந்தை ராம்ஜி சக்பாலின் விருப்பப்படி மெட்ரிகுலேசனில் தேர்வு பெற்ற பீம்ராம் அம்பேத்கருக்கும், சுமை தூக்கும் கூலியான பிக்கு வலங்கரின் மகளான இராமி என்கிற இராமாபாய்க்கும், பம்பாய் பாய்குளா மீன் மார்க்கெட் மேடையில் இரவோடிரவாக திருமணம் நடைபெற்றது. அப்போது அம்பேத்கருக்கு வயது பதினேழு. இராமாபாய்க்கு வயது ஒன்பது. படிப்பறிவு இல்லாத இராமாபாய் மனைமாட்சி மிக்கவராய்த் திகழ்ந்தார். அம்பேத்கரின் உயர் படிப்புக்குத் தடையாக இல்லாமல் புகழ்புரிந்த இல்லாளாய் வாழ்ந்தார். மங்கல வாழ்வில் நன்மக்களைப் பெற்று வளர்த்தார். இல்லற வாழ்வில் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்த அன்னை இராமாபாய் 27.5.1935-ல் இயற்கையெய்தினார். டாக்டர் அம்பேத்கருக்கு எல்லாமுமாய் வாழ்ந்த இராமாபாயின் மறைவு மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறுமணமே செய்துக்கொள்ளக் கூடாது என மனஉறுதியோடு வாழ்ந்த அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை தனியொருவராக - குழுவினர் ஒருவரும் ஒத்துழைக்காத நிலையில், தன் செயலர் துணையுடன் அல்லும் பகலும் அயராதுழைத்து எழுதியமையால் பல நோய்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அரசின் சட்ட அமைச்சரும், இந்திய அரசமைப்புச் சட்டச் சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரை சாரதா கபீர் என்னும் மருத்துவர் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். டாக்டர் அம்பேத்கர் உடல்நலம் பெற்றிட இராப்பகலாக உடனிருந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்தும், இதமாகப் பேசி ஊசிகளைப் போட்டும் நோய்களை குணப்படுத்தினார். இதனால் டாக்டர் அம்பேத்கர் சாரதா கபீர் மீது பற்றும் பாசமும் மதிப்பும் மரியாதையும் மிகக் கொண்டார்.
டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனையிலிருந்து இல்லம் ஏகும்முன் மூத்த மருத்துவர்கள் சில ஆலோசனைகளைக் கூறினார்கள். "நாட்டு மக்களின் நலனுக்காக நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும். அதற்கு உங்கள் உடலுக்கேற்ற உணவு வகைகளை மட்டுமே நேரம் தவறாமல் உண்ணவேண்டும். உங்கள் உடல் நோய்களை வலிகளைக் கட்டுப்படுத்த உணவுக்கு முன்னும் பின்னும் வேளை தவறாமல் மருந்து மாத்திரை ஊசிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஓய்வும் உறக்கமும் அவசியம் மேற்கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் உங்கள் உடனிருந்து கவனித்துக்கொள்ள மருத்துவம் தெரிந்த ஒரு செவிலியரோ - மருத்துவரோ 24 மணி நேரமும் உங்கள் உடனிருக்க வேண்டும்" என்றனர். நண்பர்களும் இதனை வலியுறுத்தினர்.
டாக்டர் அம்பேத்கரின் அறிவாற்றலின் மீது அதீத பற்று கொண்டு பணிவிடைகள் செய்த மருத்துவர் செல்வி சாரதா கபீர் தானே டாக்டர் அம்பேத்கர் உடனிருந்து கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மனைவியை இழந்து பதின்மூன்று ஆண்டுகள் தனிமையில் நோய்களால் துன்புற்ற டாக்டர் அம்பேத்கர் செல்வி சாரதா கபீரை திருமணம் செய்துகொள்ள மனமிசைந்தார்.
திருமணம் உறுதிசெய்யப்பட்டது. டாக்டர் செல்வி சாரதா கபீர் பம்பாயிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்தார். 1948 ஏப்ரல் 15ஆம் நாள் அம்பேத்கரின் அய்ம்பத்தாறாவது அகவையின் இரண்டாவது நாளில் சருசத் பார்ப்பனப் பெண்ணான டாக்டர் செல்வி சாரதா கபீரைப் புதுதில்லியில் ஹார்டிஞ் அவின்யூ எண். 1-ல் இருந்த அவருடைய இல்லத்தில் மணந்துகொண்டார். தில்லியின் துணை ஆணையர் இத்திருமணத்தைச் சிவில் திருமணச் சட்டத்தின்படி நடத்திவைத்தார். இத்திருமணத்தில் அம்பேத்கரின் நண்பர்கள் சிலர் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்தபின் அவர்களுக்கு அம்பேத்கர் விருந்தளித்தார். "சாதாரணமான ஒரு குடிமகன் ஒரு மன்னனின் மகளை மணந்து கொள்ளுவதைவிடச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது அம்பேத்கரின் திருமணம்" என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு எழுதியது.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - அரசியல் அமைப்பின் தந்தை: பக்கம் 600
நியூயார்க் டைம்சின் கோணல் புத்தியை கூர்ந்து நோக்குங்கள். அமெரிக்காவிலும், லண்டனிலும், ஜெர்மனியிலும் கல்வி கற்று பட்டங்கள் பெற்று அறிவுலகக் கோமானாகி இந்திய அரசியல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் சிற்பியாகவும் உள்ள டாக்டர் அம்பேத்கரை ஒரு சாதாரண குடிமகனாகவும், எம்.பி.பி.எஸ். பட்டம் மட்டும் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் சாரதா கபீரை மன்னன் மகளாகவும் ஒப்பிட்டிருப்பது சாதி ஏற்றத்தாழ்வை உள்மனதில் கொண்டு எழுதப்பட்ட குள்ளநரித்தனமாகும். எது எப்படியோ...
முதல் திருமணம் இல்லற வாழ்க்கையில் இணைந்து இன்புறுவதற்காக பெற்றோரும் உற்றோரும் பம்பாய் பாய்குளா மீன் மார்க்கட்டில் இரவோடிரவாக அச்சத்துடன் நடத்தி முடித்தத் திருமணம். இரண்டாவது திருமணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதிடும் அரசியல் மாமேதையின் இன்னுயிரைப் பாதுகாக்கும் நோக்கில், டெல்லியில் உள்ள தன் வீட்டில் நண்பர்கள் சூழ, தில்லியின் துணை ஆணையரே நேரில் வந்து திருமண ஒப்பந்தத்தைப் பதிவு செய்திட இந்திய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கருக்கும் மருத்துவர் செல்வி சாரதா கபீருக்கும் நடந்தேறியது.
டாக்டர் சாரதா கபீர் சவீதா கபீராகி டாக்டர் அம்பேத்கருடன் தங்கி வேளாவேளைக்கு மருந்தும் மாத்திரைகளும் உணவுக்கு முன்னும் பின்னும் வழங்கி மிகமிக அக்கறையோடு கவனித்துக் கொண்டார். டாக்டர் அம்பேத்கரும் உடல் உபத்திரவம் குறைந்து சட்டத்தை சளைக்காமல் எழுதி முடித்து 4.11.1948 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்மொழிந்தார். பலகட்ட விவாதங்கள் விளக்கங்களுக்குப் பிறகு 26.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்து மதத்திலுள்ள சீர்கேடுகளைக் களைந்திட, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கிடும் இந்துச் சட்டத்திருத்த மசோதாவை அரசின் சார்பில் 5.2.1951-ல் டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாகக் கூறிய நேரு, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்றவர்களின் எதிர்ப்பால் 10.8.1951-ல் தன் பிரதமர் பதவியை பாதுகாத்துக்கொள்ள சட்டத்தை ஆதரிக்காமல் கைவிட்டுவிட்டார். பெண்களுக்கு உரிமைகள் வழங்கிடும் இந்தச் சட்டத்தை பெண்களே எதிர்த்தனர். இந்து மதவாதிகளும் எதிர்த்தனர். இந்து மதத்தைச் சீர்திருத்தவே டாக்டர் அம்பேத்கர் விரும்பினார். அது முடியாமல் போகவே டாக்டர் அம்பேத்கர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினார். இந்து மதத்தை விட்டே வெளியேறவும் முடிவு மேற்கொண்டார். பெளத்தம் தழுவினார் பல லட்சம் மக்களோடு நாக்பூரில். அப்போதே அண்ணல் அம்பேத்கரை ஒழித்துவிட சதிதிட்டம் தீட்டினார்கள் இந்துத்துவாவாதிகளும் இந்து மத ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும். அதற்கு அவர் மனைவி சரசத் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த சவீதா கபீரை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்வதும் கொலைதான், மூச்சுத்திணற முகத்தை அழுத்திக் கொள்வதும் கொலைதான், விஷ ஊசிப் போட்டு உடலை மரத்துப்போகச் செய்துக் கொல்வதும் கொலைதான். மருந்துகளை அளவுக்கு அதிகமாகக் கொடுத்துக் கொல்வதும் கொலைதான். கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுக்காமல் கொல்வதும் கொலைதான். இந்த இறுதி வகைக் கொலையைதான் இந்துத்துவாவாதிகள் தேர்ந்தெடுத்தனர்.
ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் பார்ப்பனன். அவனுக்கு துப்பாக்கியும், சுடும் பயிற்சியும் வழங்கியவர் வ.வே.சு. அய்யர். தேசப்பிதா காந்தியைச் சுட்டுக் கொன்றவன் விநாயக் நாதுராம் கோட்சே எனும் பார்ப்பனன். அவனைத் தயார் செய்து அனுப்பியவர்கள் இந்துத்துவா பார்ப்பனர்கள். இங்கு டாக்டர் அம்பேத்கரை கொல்லாமல் கொன்றவர்கள் சரசத் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த சவீதா கபீரின் உறவினர்கள்?!
1956 டிசம்பர் 3ஆம் நாள் மாலை உடல் சோர்வுற்றிருப்பதாக உணர்ந்தார்; அவருடைய மனைவி சவீதா அம்பேத்கரின் சகோதரர் பாலு கபீர் நிழற்படம் எடுக்க விரும்பியதால், அதற்குத் தேவையான நாற்காலிகளைக் கொண்டு சென்று புல்வெளியில் போடுமாறு அவருடைய பணியாளர்களிடம் கூறினார். ஒரு குழுவினராக நிற்கவைத்துப் பாலு கபீர் எடுத்த அந்நிழற்படத்தில் திருமதி சவீதா அம்பேத்கர், டாக்டர் அம்பேத்கர், சவீதா அம்பேத்கரின் தந்தை கே.பி. கபீர், டாக்டர் மெளலங்கர் முதலானோர் இருந்தனர்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப்பயணம்: பக்கம் 768-769
டாக்டர் அம்பேத்கரை கொல்லும் சதிதிட்டம் அவர் வீட்டிலேயே உருவாகியது. அதன் ஒரு பகுதிதான் இப்படப்பிடிப்பு. டாக்டர் அம்பேத்கர் இறக்கும் முன் - இருக்கும்போதே குடும்பப் படம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டனர். குடும்பச் சொத்துகளுக்கு - வாரிசு உரிமை ஆதாரமாக படம் எடுக்கப்பட்டது... டிசம்பர் 3ஆம் நாள் மாலை! அன்று இரவெல்லாம் சவீதா அம்பேத்கர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் தந்தை கபீர், தம்பி பாலு, டாக்டர் மெளலங்கரால்.
1956 டிசம்பர் 4ஆம் நாள் அம்பேத்கர் மாநிலங்கள் அவையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்; மாநிலங்கள் அவையின் வராந்தாவில் (Lobby) அமர்ந்து அம்பேத்கர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். இதுதான், நாடாளுமன்றத்திற்கு, அம்பேத்கரின் கடைசி வருகையாக இருக்கும் என்று எவரும் நினைத்துப் பார்க்கவுமில்லை.
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
4ஆம் தேதி அன்றுகூட டாக்டர் அம்பேத்கர் தெம்புடனும், திடகாத்திரமாகவும் இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அன்று மாலை ஆச்சாரியா பி.கே. அட்ரேவுக்கும், எஸ்.எம். ஜோஷிக்கும் அவர் சொல்லச் சொல்ல இரண்டு முக்கியக் கடிதங்களை ராட்டு எழுதியுள்ளார்...!
... திருமதி சவீதா அம்பேத்கரின் தந்தை, சகோதரர் மற்றும் ஜாதவ் முதலானோர் டிசம்பர் 4ஆம் நாள் மாலை தொடர்வண்டியில் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றனர்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
குடும்ப டாக்டரான மெளலங்கர் அவர்களுடன் செல்லவில்லை. 3ஆம் நாள் இரவும், 4ஆம் பகலும் அம்பேத்கரைச் சாகடிக்கும் சதி திட்டங்கள் வகுக்கப்பட்டு அதை
Dr. சவீதா அம்பேத்கரும், Dr. மெளலங்கரும் நிறைவேற்ற வேண்டும் எனப் பொறுப்பும் ஒப்படைத்துவிட்டு சவீதாவின் தந்தையும், தம்பியும் பம்பாய்க்குப் புறப்பட்டு சென்றுவிட்டனர். 1956 டிசம்பர் 5ஆம் நாள் திட்டமிட்டபடி சதிசெயல்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சவீதா கபீரும், மெளலங்கரும் டாக்டர்கள் என்பதால் என்னென்ன செய்தால் ஒரு நோயாளியின் உயிரை பாதுகாக்க முடியும், என்னென்ன செய்தால் ஒரு நோயாளியின் உயிரைப் போக்க முடியும் என்பதை நன்கறிந்தவர்கள். நோயாளியை மன உளைச்சல் ஏற்படாமல் அமைதிப்படுத்த வேண்டும். வேளை தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடக் கொடுக்கவேண்டும். ஆபத்து என்றால் அவசர சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தவேண்டும். இவை அனைத்துக்கும் நேர்மாறாக டாக்டர் சவீதா கபீரும், டாக்டர் மெளலங்கரும் 5ஆம் நாள் நடந்துகொண்டுள்ளனர்.
1956 டிசம்பர் 5ஆம் நாள் பகல் ஒன்றரை மணிக்கு, கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக, குடும்ப மருத்துவரான டாக்டர் மெளலங்கருடன் சவீதா அம்பேத்கர் வெளியே சென்றார். அவர்கள் போனபிறகு நீண்ட நேரங் கழித்து, அம்பேத்கர் அழைப்பு மணியடித்து அவருடைய மனைவி வீட்டிற்கு வந்துவிட்டாரா என்று இரண்டு மூன்று தடவை கேட்டார். ஆனால் அவர் அதுவரை திரும்பவில்லை. சமையல்காரர் வீட்டின் மின்விளக்குகளைப் போட்டார். அம்பேத்கரை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார். பிறகு அம்பேத்கர் தேநீர் அருந்தினார். மீண்டும் அம்பேத்கர் அழைப்பு மணியை அடித்தார். அவருடைய முகம் திடீரென்று சிவந்து காணப்பட்டது. ராட்டு மாலை 5.30 மணிக்கு அம்பேத்கரின் வீட்டிற்கு வந்தார்; அச்சமயம் அம்பேத்கர் பெரிதும் மனங்குலைந்திருப்பதைக் கண்டார். தட்டச்சு செய்வதற்கெனச் சிலவற்றை அம்பேத்கர் ராட்டுவிடம் கொடுத்தார். அப்போதுதான் சவீதா அம்பேத்கர் டாக்டர் மெளலங்கருடன் வீட்டிற்குள் நுழைந்தார். சவீதா அம்பேத்கர், அம்பேத்கரின் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தார். சினமுடன் இருந்த அம்பேத்கர் அவரைக் கூரிய கடுஞ்சொற்களால் கடிந்தார். அம்பேத்கரைச் சமாதானப்படுத்துமாறு ராட்டுவிடம் சவீதா அம்பேத்கர் கேட்டுக்கொண்டார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 771
பகல் ஒன்றரை மணிக்கு டாக்டர் மெளலங்கருடன் சென்று விட்டு மாலை 6.00 மணியளவில் இருவரும் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். மேட்னி ஷோ சினிமா பார்த்துவிட்டு வந்திருப்பார்களோ?! டாக்டர் சவீதா, டாக்டர் அம்பேத்கருக்கு மனைவியானதே மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்காகவே. டிசம்பர் 5ஆம் தேதி டாக்டர் அம்பேத்கருக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் கொடுக்காமல் இன்னொருவருடன் வெளியில் சென்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வருகிறார். வந்த பின்னரேனும் மருத்துவர் என்ற முறையில் அவர் கடமைகளை - மருந்து மாத்திரைகளைக் கொடுத்திருக்க வேண்டும். கணவர் கடிந்துகொண்டாலும் மனைவி என்ற முறையில் அவரைச் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் கல்நெஞ்சர் அல்லர். தான் வளர்த்த நாய் இறந்துவிட்டது என்றபோது குழந்தைபோல் தேம்பி தேம்பி அழுதவர். தன் வீட்டுத் தோட்டக்காரன் நோய்வாய்ப்பட்டபோது அவனைத் தேடிச் சென்று ஆறுதல் கூறி உதவிகள் செய்தவர். அம்பேத்கரை உணர்ச்சிவயப்படுத்தி உள்ள உளைச்சலை உண்டாக்கி ஒழித்துவிட வேண்டும் என்னும் உள்ள உறுதியுடன் சவீதா இருந்தமையாலேயே மெளலங்கருடன் கூட்டுச் சேர்ந்து மனிதாபிமானமற்று நடந்து கொண்டார்.
அன்றிரவு எட்டு மணியளவில் அம்பேத்கரின் சினம் ஓரளவு தணிந்தது. முன்னரே சந்திக்க வருவதற்கான ஏற்பாட்டைச் செய்துகொண்டிருந்தவாறு சமண சமயத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் அப்போது அம்பேத்கரை காண வந்தனர்............. அம்பேத்கர் சமணத் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது - அவர் வீட்டில் தங்கிய கடைசி விருந்தாளியான டாக்டர் மெளலங்கர் அம்பேத்கரின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அன்றிரவு விமானம் மூலம் பம்பாய்க்குச் சென்றார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
எங்கே மனைவி என்ற மன உந்துதலில் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து டாக்டர் அம்பேத்கரை சவீதா காப்பாற்றி விடுவாரோ என்ற எண்ணத்தினாலேயே இரண்டு மூன்று நாட்கள் சவீதாவுடனிருந்து எல்லாம் திட்டப்படி நடந்தேறிவருவதை உறுதிப்படுத்திக் கொண்டே டாக்டர் மெளலங்கர் பம்பாய்க்குப் பயணமானார். டாக்டர் அம்பேத்கரை மர்மமாகக் கொல்லவேண்டும் என்பதற்காகவே டாக்டர் அம்பேத்கரை சவீதா நெருங்க விடாமல் தடுத்துவிட்டு, அவர் இறப்பது உறுதி என உணர்ந்த பின்னரே - அவர் மரணிக்கும்போது தான் அங்கு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அன்றிரவே வெளியேறி விமானம் ஏறிவிட்டார்.
டாக்டர் அம்பேத்கரை அன்றிரவு முழுக்க டாக்டர் சவீதா சந்திக்கவேயில்லை. மருந்து மாத்திரை ஊசி எதுவும் போடவில்லை. மனைவி என்ற முறையிலோ, மருத்துவர் என்ற முறையிலோ அம்பேத்கரை அவர் அணுகவேயில்லை.
1956 டிசம்பர் 6ஆம் நாள் காலை சவீதா அம்பேத்கர் வழக்கம் போல் எழுந்தார். 6.30 மணியளவில் அம்பேத்கரின் படுக்கை மீது தன் பார்வையைச் செலுத்தினார். அம்பேத்கரின் கால் திண்டுமீது இருப்பதைக் கண்டார். வழக்கம்போல் தோட்டத்தைச் சுற்றிவிட்டு வந்தபிறகு எப்போதும் போல் அம்பேத்கரை எழுப்புவதற்காகச் சென்றார். அம்பேத்கரை எழுப்பிட முயன்றார். ஆனால் அவருடைய கணவர் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதைக் கண்டு பேரதிர்ச்சியடைந்தார். ராட்டுவை அழைத்து வருமாறு தன் காரை அனுப்பினார்; ராட்டுவும் வந்து சேர்ந்தார்; ராட்டுவைக் கண்டதும் சவீதா அம்பேத்கர் "பாபாசாகிப் இவ்வுலகத்தை விட்டுப் போய்விட்டாரே! என்று கதறிக்கொண்டு நிலைகுலைந்து சோபாவில் வீழ்ந்தார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 774-775
நாடகத்தை நடத்தி முடித்த சவிதா சோபாவில் சாய்ந்து மயங்கினாரா? கண்விழித்தால் உண்மைகள் வெளிபட்டுவிடுமோ என்ற அச்சத்தால்!? நடித்தாரா
அம்பேத்கர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதைப் போல் அருமையான ஒரு நாடகத்தை நடத்திவிட்டார்கள் அம்பேத்கரின் மனைவி டாக்டர் சவீதாவும், அவருடைய நண்பர் டாக்டர் மெளலங்கரும், சவீதாவின் தந்தை மற்றும் தம்பி பாலுவும். ஆக மநுநீதிக்கு நேர்மாறான மனிதநேயம்மிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர் இந்து மசோதா சட்டத்தை நிறைவேற்ற முடியாமையினால் அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, இந்து மதத்திலிருந்தால் சதுர்வர்ணக் கோட்பாடுகளை வர்ணாஸ்ரம தர்மங்களை ஏற்றாக வேண்டும். சதுர்வர்ணத்துக்கு உட்படாத அவர்ணாஸ் (Outcaste) ஐந்தாம் வருணத்தாராகிய பஞ்சமர்கள் - பஞ்சசீலம் கற்ற பெளத்தர்கள் மீண்டும் தாய் மதமாகிய பெளத்தத்தில் இணைய வேண்டும் என ஆறேழு லட்சம் மக்களோடு ஒரே நாளில் பவுத்தம் தழுவிய மாபெரும் மதப்புரட்சியாளரை - அரசியல் மாமேதையை - அறிவுலகக் கோமானை இந்துத்துவாவாதிகள் இல்லாமல் செய்துவிட்டனர்!
இது கற்பனை கட்டுக்கதையல்ல, மூன்று, நான்கு, ஐந்தாம் நாட்களில் நடைபெற்றச் சம்பவங்களை தில்லியின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்தக் கோணத்தில் அல்லவா புலன் விசாரணை செய்திருக்க வேண்டும்!

-       தமிழ்மறையான்
புத்தர் அறிவுலகம்
நிறுவனர்: கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்